4 ஆயிரம் பேர் நேற்று 20-09-2012 பணிக்கு வரவில்லை. ஏன் பந்த் அன்று பணிக்கு வரவில்லை என்று விளக்கம் கேட்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


அரசு பள்ளிகளில் நேற்று20-09-2012 பணிக்கு வராதவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை கணக்கு எடுத்தது. இதில் பணியாற்றும் 1 லட்சத்து 36 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் நேற்று பணிக்கு வரவில்லை. இது குறைவான அளவாக இருந்தாலும், அவர்கள் ஏன் பந்த் அன்று பணிக்கு வரவில்லை என்று விளக்கம் கேட்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பணிக்கு வராதவர்கள் குறைவாக இருந்ததால் பள்ளிகளுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளது. விடுமுறை விட்ட தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்க மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.